Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுக தலைமீது கத்தி தொங்கி கொண்டிருக்கின்றது: பிரேமலதா

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:36 IST)
அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
 
திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு கூட்டணியும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
 
அதிமுக கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேமுதிக இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியும் அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே தேமுதிக தனித்து விடப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் செங்கல்பட்டில் பிரேமலதா இன்று பேசியபோது தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுகவுக்கு எதிர்காலம் என்றும் அதிமுக திமுக இரு கட்சிகளுக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் தேமுதிகவிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 
ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியில் தேமுதிக இணையவில்லை என்றால் தேமுதிகவின் முடிவு வெகு சீக்கிரம் எழுதப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments