Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண் இரும்புக் கம்பியால் அடித்துப் படுகொலை; கணவர் தற்கொலை முயற்சி

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2014 (17:24 IST)
கர்ப்பிணி பெண் இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். மனைவியை கொன்ற கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் நவீன் பிரசாத் (31). இவர் அந்தப் பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற சிந்து பிரியா (25)பி.காம். சி.ஏ. முடித்தவர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
 
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் திருமணத்துக்கு சிந்து பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆவாரம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.
 
இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த சிந்து பிரியா, 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், தொடர்ந்து தம்பதிக்குள் சண்டை வருவதாலும் தாய் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அவர்களும் 7ஆவது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
 
சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு, நவீன்பிரசாத் ஒர்க் ஷாப்பில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த சிந்து பிரியாவை எழுப்பி, சாப்பாடு போடச்சொல்லி இருக்கிறார். அதற்கு சிந்து பிரியா தனது உடல் நிலையை காரணம் காட்டி தூங்கி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடி தகராறில் ஈடுபட்டனர்.
 
முடிவில் சிந்து பிரியா இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்றார். தனது தாய் வீட்டுக்கு சென்றால் மனவருத்தம் அடைவார்கள் என்று வீதியில் நின்றிருக்கிறார். இதானல் கடும் ஆத்திரம் அடைந்த கணவர் நவீன்பிரசாத் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை தூக்கிக்கொண்டு ஓடிவந்துள்ளார்.
 
இதனைக் கண்டு பயந்து போன சிந்து பிரியா அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் நவீன் பிரசாத் அவரை விடாமல் துரத்தி இரும்புக் கம்பியால் மனைவியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிந்துபிரியா ரத்தவெள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார்.
 
உடனே நவீன் பிசாத் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நவீன் பிரசாத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
 
இந்நிலையில் ரேஸ் கோர்ஸ் பகுதியில், சாலையோரத்தில், ஒருவர் சாணி பவுடரை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது தனது பெயரை பிரசாத் என்று நர்சுகளிடம் கூறியுள்ளார்.
 
உடனே இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் புறக்காவல நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செல்போன் ‘வாட்ஸ்அப்’ மூலம் அவருடைய புகைப்படத்தை பெற்று, ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அப்போது நவீன்பிரசாத் தான் அவர் என்று உறுதி செய்தனர்.
 
காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். அவர் தப்பி ஓடாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments