Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்; பிறந்த குழந்தை பலி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:45 IST)
கோவையில் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முயன்று குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் செட்டி வீதியை சேர்ந்தவர் புண்ணியவதி. இவருக்கு திருமணமாகி சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கர்ப்பமாகியுள்ளார். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற முயன்றுள்ளார்.

அதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள் கொடியை சரியாக அறுக்காத காரணத்தால் பிறந்த சில நிமிடங்களில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து புண்ணியவதி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்து குழந்தை உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments