Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத உறவால் கர்ப்பம்.. குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய்! – அரியலூரில் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 2 மே 2024 (09:53 IST)
அரியலூரில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம்பெண் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அரியலூர் மாவட்டம் மீன்சுருட்ட்டி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த அன்புதுரை என்ற 21 வயது இளைஞருடன் காதலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டிய அன்புதுரை இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் அன்புதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் குழந்தையை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 28ம் தேதி திடீரென குழந்தையை காணவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ: பெண் காவலர்களை உல்லாசத்துக்கு அழைக்கும் டுபாக்கூர் போலீஸ் அதிகாரி! – வளைத்து பிடித்த ஒரிஜினல் போலீஸ்!

அப்போது இளம்பெண் மற்றும் அவரது தாயாரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய உண்மை தெரிய வந்துள்ளது. திருமணம் ஆகாமலே தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்று விடுவது என முடிவு செய்த இருவரும், பச்சிளம் குழந்தையை கொன்று பெரியமடையன் ஏரிக்கரையில் புதைத்துள்ளனர்.

அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் கொலை வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments