Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலி அகற்றிய 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்கு செய்த சாமியார்கள்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (20:17 IST)
தாலி அகற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 பெண்களின் கணவர்களுக்கு திருவண்ணாமலை இந்து சாமியார்கள் ஈமச்சடங்கு செய்துள்ளனர்.
 
கடந்த 14ஆம் தேதி திராவிடர் கழகத்தினர், சென்னையில் உள்ள பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், 21 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாலி அகற்றிய 16ஆம் நாளான நேற்று திருவண்ணாமலையில் உள்ள 21 இந்து சாமியார்கள், தாலி அகற்றிய 21 பெண்களின் கணவர்களுக்கும் ஈமச்சடங்குகள் செய்துள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியை இந்து மத முறைப்படி செய்துள்ளனர். பூஜைகள் செய்தும், சிவபுராணம் பாடியும் குளத்தில் இறங்கி ஈமச்சடங்கை செய்துள்ளனர். இதனை அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments