Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (13:36 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை நேற்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தனர் என்பதும், இந்த சந்திப்பின்போது சுனில் மற்றும் ஆதவ் அர்ஜூனா இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக தேர்தல்  செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்ததாகவும் இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூட்டணியில்  எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யை அடுத்து அவருடைய கட்சியின் நிர்வாகிகளையும் பிரசாந்த் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த சந்திப்பால் அவர் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட போவதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments