Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தோடு போட்டி போடும் உருளைக்கிழங்கு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (11:13 IST)
சமீப காலமாக வெங்காய விலை அதிகரித்து வரும் அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் உருளைக்கிழங்கும் விலை அதிகரித்து வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் அதீத மழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் தமிழகத்திற்கு வெங்காய வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழக அரசு எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறது,.

இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு உருளைக்கிழங்கி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை விலை வழக்கமான விலையை விட ரூ.1000 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ உருளை ரூ.100 விற்று வரும் நிலையில் மேலும் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments