Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதல்வராக பதவியேற்கும் போஸ்டர்கள் - களைகட்டும் மதுரை

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (16:16 IST)
சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், சசிகலா எனும் நான் என்கின்ற பெயரில் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அஇஅதிமுக பொதுச்செயலாளாராகவும், தமிழக முதலமைச்சராகவும் பொருப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறிவந்த நிலையில் இந்த போஸ்டர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments