Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையை காட்டிய ஈபிஎஸ் படையினர்? கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்!!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (12:55 IST)
அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு. 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
அதோடு துணை முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசிப்பார்கள் என தகவல். அதன்படி, மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லம் அருகே ’அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்’ என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments