Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்....கோடிப் பேர் வருவார்கள்... முதல்வருக்கு நிர்வாகி சவால் !!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (16:53 IST)
நேற்று காலையில் ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளர்.

அவரை பிரமாண்டமான முறையில் வரவேற்க அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்நிலையில் சசிகலாவை வரவேற்றுப் போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அ.இ.அ.தி.மு.கவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளார் அவர்களே வருக…ஆளுமையை உருவாக்கிய ஆளுமையே என்று அவர் போஸ்டரில் ஒட்டியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் நீக்கப்பட்ட நிர்வாகி,  என்னை நீக்கிவிட்டீர்கள்..நாளை லட்சம் பேர் வருவார்கள் இந்த எண்ணிக்கை கோடியாக கூடும் என்ன செய்வீர்கள் என முதல்வர் மற்றும் துணமுதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments