Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணியாளர்களுக்கு இன்று தபால் வாக்குப்பதிவு!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (06:44 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக எடுத்து வருகிறது 
 
இந்த நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கூட்டணி என ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர்களுக்கு தபால் வாக்கு பதிவுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் இன்று சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகும் தபால் வாக்குகள் மற்றும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குகல் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments