Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாதீப மலையில் மீண்டும் மண்சரிவு ஏற்படலாம்?? மலை ஏற தடையா? - ஐஐடி நிபுணர்கள் எச்சரிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:09 IST)

திருவண்ணாமலையில் அடுத்த வாரம் கார்த்திகை மகாதீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மழை காரணமாக மண் சரிவு ஏற்படலாம் என ஐஐடி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

வங்க கடலில் உருவான ஃபெங்கல் புயல் சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் 7 பேர் பலியானார்கள். மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி நிபுணர்கள் நிலம், மண் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் லேசான மழையால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ள அவர்கள், மண் சரிவு குறித்த ஆய்வு அறிக்கையை அரசிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என கூறியுள்ளனர்.
 

ALSO READ: புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் விவரங்கள் கேட்டறிந்த பிரதமர் மோடி..!
 

வரும் 13ம் தேதியன்று திருக்கார்த்தை மகாதீபம் மலை மீது ஏற்றப்பட உள்ளது. வழக்கமாக இந்த மகாதீப நாளில் பலரும் மகாதீப மலை ஏறுவது வழக்கம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஐஐடி நிபுணர்களின் அறிக்கையை பொறுத்தே இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments