Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல திருடி கைது!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல திருடி கைது!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (17:19 IST)
சென்னையில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல திருடி சாந்தி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டையை சேர்ந்த கலைமணி என்பவர் கடந்த திங்கள் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது மணிபர்ஸை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளார்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பெற்று ஆய்வு செய்தனர்.
 
இந்த ஆய்வில் பல்வேறு தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மாம்பலத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தான் இந்த திருட்டையும் செய்தது என்பது தெரியவந்தது. இதனையடுத்து சாந்தியை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments