Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ரியல் எஸ்டேட் மோசடி கும்பல் கைது

Webdunia
வியாழன், 16 மே 2019 (12:52 IST)
சென்னை உள்பட பல பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய் ஏமாற்றிய நான்கு பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.


மதுரையை சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கதிரவன், கணேசன் ஆகிய 4 பேரும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான வேலூர், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். தங்கள் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் பணம் கட்டினால் சில வருடங்களுக்கு பிறகு சொந்தமாக நிலம் வழங்கப்படும் என்ற இவர்களின் விளம்பரத்தை நம்பி பல ஆயிரம் மக்கள் இந்நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளனர். சுமார் 50கோடி பணம் சேர்ந்ததும் அதில் நிலங்களை வாங்கி தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பணம் கட்டி ஏமாந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூரை சேர்ந்த விக்ரம் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் மோசடி கும்பல் மதுரையில் உள்ள ஒரு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் மோசடி கும்பல் நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையிலடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments