மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

Siva
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (14:14 IST)
சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பேருந்து நிலையம், நெருக்கடியான இடத்தில் இயங்கி வரும் நிலையில்  இந்த பேருந்து நிலையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் வாகன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லவும், உள்ளே செல்லவும் கடுமையான பிரச்சினைகள் உள்ளன. இதைத் தீர்க்க, குத்தம்பாக்கத்தில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கட்டும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் பூந்தமல்லி பேருந்து நிலையம் அங்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலையம் தயாராகி வருகிறது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஓசூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பணிகளை விரைவில் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments