அம்பேத்கர் சிலையை உடைத்த மர்ம நபர்கள்! – பொன்னேரியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:52 IST)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் என்ற கிராமத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிலையை மர்ம நபர்கள் தாக்கி சிலையின் முகம் மற்றும் கையை சேதப்படுத்தியுள்ளனர்.

காலையில் அப்பகுதி வழியாக சென்ற மக்கள் சிலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த சோழவரம் போலீஸார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அங்கிருந்த மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments