Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கர் சிலையை உடைத்த மர்ம நபர்கள்! – பொன்னேரியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:52 IST)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் என்ற கிராமத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிலையை மர்ம நபர்கள் தாக்கி சிலையின் முகம் மற்றும் கையை சேதப்படுத்தியுள்ளனர்.

காலையில் அப்பகுதி வழியாக சென்ற மக்கள் சிலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த சோழவரம் போலீஸார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அங்கிருந்த மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments