Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா குறித்த கேள்வி.. கடுப்பான அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:56 IST)
ஆ ராசா குறித்து எந்த கேள்வி கேட்டாலும் திமுக பிரமுகர்கள் பதில் சொல்ல மறுத்து வருவது கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ ராசா பேசியது இந்து மத மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று இது குறித்த கேள்வி ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் செய்தியாளர்கள் பேசியபோது அந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்தார்.  உடன் இருந்த திமுக எம்பி தயாநிதி மாறனும் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்த போது ஆ ராசா குறித்த கேள்வியை கேட்ட போது வேறு கேள்வியே இல்லையா என அவர் கடுப்பானார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆ ராசாவுக்கு திமுக தரப்பில் எந்த விதமான ஆதரவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments