Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாட்டம்!

Prasanth Karthick
திங்கள், 15 ஜனவரி 2024 (09:40 IST)
இன்று தை முதல் நாளில் தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் திருநாளை பொங்கல் பொங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



தமிழ் மாதத்தின் சிறப்பு மிக்க நாளான தை மாதத்தில் முதல் நாளில் விவசாயத்தை செழித்தோங்க செய்யும் சூரியனுக்கு நன்றி கூறும் வகையில் தமிழக மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

அவ்வாறாக இன்று பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே ஈடுபட தொடங்கினர். பொங்கலை முன்னிட்டு ஒரு வாரமாகவே கடைத்தெருக்கள், அங்காடிகள் முழு கூட்டமாக இருந்தது. பலரும் பூஜைக்கு தேவையான பொருட்கள், கரும்பு, வெல்லம், மஞ்சள் செடி என வாங்கி சென்றனர்.

இன்று விடியற்காலையே வாசலில் சாணி மெழுகி கோலமிட்டு அடுப்பு வைத்து மண் பானையில் பாரம்பரிய முறைப்படி பல இடங்களில் மக்கள் பொங்கலை பொங்கி சூரியனை வழிபட்டனர். இந்த நன்னாளில் மக்கள் பொங்கலையும், அன்பையும் மற்றவர்களோடு பகிர்ந்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments