Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:46 IST)
பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட உள்ளன என்பதும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று இதனை ஆரம்பித்து வைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த டோக்கனை குறிப்பிடப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதியின்படி பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் வரும் பத்தாம் தேதி பின்னர் டோக்கன் பெற்று அதன் பின்னர் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
 
அதேபோல் டோக்கன் பெற்றவர்கள் எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற முடியவில்லை என்றாலும் பத்தாம் தேதிக்கு பின்னர் அவர்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments