Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (18:27 IST)
பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

பொங்கல் பரிசு தொகையுடன் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மகளிர் உரிமை தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதை போல பொங்கல் பரிசு தொகையையும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.  மேலும்  பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்தை வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டும் ரொக்கமாக வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments