Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 11 ஜனவரி 2024 (09:50 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகள், ரயில்களில் சில மாதங்கள் முன்பே முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தொடங்கவுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்தப்படி உள்ளது.

ALSO READ: தாம்பரம் – தூத்துக்குடி முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்! – பயணிகள் மகிழ்ச்சி!

நேற்று தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06085) ரயில் காலை 7.30க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும், மறுமார்க்கமாக ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் இரவு 08.45க்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் (எண் 06086) மறுநாள் காலை 05.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜொலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments