Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:49 IST)
அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
 
பொங்கல் விடுமுறை வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து வரவுள்ள நிலையில் புதன் அல்லது வியாழக்கிழமையில் இருந்து சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் கிளம்பி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது
 
மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments