Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:49 IST)
அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
 
பொங்கல் விடுமுறை வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து வரவுள்ள நிலையில் புதன் அல்லது வியாழக்கிழமையில் இருந்து சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் கிளம்பி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது
 
மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments