Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள் - கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (10:39 IST)
டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள்  என புதுவை கவர்னர்  கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, அரசின் செயல்பாடுகளில் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து மூக்கை நுழைக்கிறார். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. நாங்கள் சட்டப்படி செயல் பட விரும்புகிறோம்.
 
டெல்லியில் கவர்னருக்கு எதிராக அம்மாநில முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போல் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம். எனவே கிரண்பேடி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments