Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை பிடிக்க முஸ்லீம்களை தூண்டி விடுகிறது திமுக – பொன்னார் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (10:20 IST)
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக முஸ்லீம்களை தூண்டி விடுவதாக பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.

இந்நிலையில் முஸ்லீம் மக்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசியுள்ள பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் ”குடியுரிமை சட்டம் எந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு ஆங்காங்கே போராட்டங்களை ஏற்படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments