Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் ஒரு பச்சை திராவிடன்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (11:41 IST)
பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது நான் திராவிடத்துக்கு எதிரானவன் இல்லை. நானும் பச்சை திராவிடன் தான் என அதிரடியாக கூறியுள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக காலூன்ற தீவிரமாக முயன்று வருகிறது. பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்று திராவிட கட்சிகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேசிய பொன்னார் அதிமுக தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கும் அதே நிலைமைதான் என விமர்சித்தார்.
 
இந்நிலையில் நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னார், நான் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான் என்று கூறினார். கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற மக்களின் விருப்பத்தையே தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப.வீரபாண்டியன், நானும் பச்சைத் திராவிடன்தான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதே திராவிடத்துக்குக் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments