Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் - பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு: புது கூட்டணி கணக்கா?

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (15:06 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 

 
இன்று புதன்கிழமை காலை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ’நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்துப் பேசினேன். தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை’ என்றார்.
 
ஆனாலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் கூட்டணி கணக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
ஏற்கனவே, இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவது பயனற்றது என்றும் மக்கள் நலக்கூட்டணி சார்பாக இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
 
அதே சமயத்தில், ’தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சில தினங்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments