Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் பொன் மாணிக்கவேல் ஓய்வு, சிலைக்கடத்தல் தீர்ப்பு: என்ன ஒரு ஒற்றுமை

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (22:53 IST)
சிலை கடத்தல் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு திடீரென மாற்றியது இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்து வந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நாளைதான்  ஓய்வு பெறுகிறார். இருப்பினும் நாளைய தீர்ப்பில் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றியதை நீதிமன்றம் கண்டித்துள்ளதால் நாளைய தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராக வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐஜி பொன்மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து மீண்டும் அவரிடமே விசாரணை செய்யும் அதிகாரத்தை நீதிமன்றம் ஒப்படைத்தால் சிலைக்கடத்தல் வழக்கில் பல பெரிய மனிதர்களின் முகத்திரை கிழியும் என்று கூறப்படுகிறது....!
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments