Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்: மக்களே கண்டுபிடித்து புகார்..!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (15:04 IST)
மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீரை அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று வெளியேற்றியதை மக்களே கண்டுபிடித்து புகார் அளித்துள்ள நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்நிறுவனத்தின் கழிவு நீரை மழை நீர் வடிகால் வழியாக வெளியேற்றியதாக புகார் எழுந்தது. 
 
இந்த புகாரை அடுத்து மக்களை அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 
 
சமீப காலமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் களப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த மக்களின் முயற்சியால் அலுமினிய நிறுவனம் மட்டுமின்றி இதுவரை 11 நிறுவனங்களின்  மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நிறுவனங்களை மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments