Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3பேரின் காவல் நீட்டிப்பு

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:30 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த மாதம் கைதான மூன்று பேருடைய நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த மாதம் கைதான 3 பேரிடம் நீதிமன்ற காவல் மார்ச் 3ஆம் தேதி வரை நீடித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் இதுவரை இந்த வழக்கில் 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் மேலும் சில பெண்கள் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்த போராட்டம்: தேதி அறிவிப்பு..!

வெப்பநிலை இன்று அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கும்பமேளாவின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனார்கள். அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல்..!

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

அடுத்த கட்டுரையில்