Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடு பிடிக்கின்றது பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் தீர்ப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:37 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன் பின் அந்த வழக்கு குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைவில் முடிக்க தயார் என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
 
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருளானந்தம் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணை தாமதம் ஆவது ஏன் என நீதிமன்றம் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறையால் விசாரணை தாமதமாக நடந்து வருவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில்  பொள்ளாச்சி பாலியல் வழக்கை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் முடிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் விரைவில் இந்த வழக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்