Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பல்கலை அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் இடைநீக்கம்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2015 (16:16 IST)
சென்னை பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார். அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக இருந்த ராமு மணிவண்ணன் பூரண மதுவிலக்கு கோரி  மாணவர்களுடன் போராட்டம் நடத்தினார். இவரை பல்கலைகழகம் சமீபத்தில் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில் பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை நீக்கம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் அறிவியல் மாணவர்கள் அனைவரும் தங்களது அறைகளை காலி செய்யவும் உத்தரவில் கூறியுள்ளார். மேலும் ,மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments