Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பக்கம் போகாதீங்க.. உருட்டு கட்டை போலீஸ் நிக்கிறார்! – மெரினாவில் பீதி!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:41 IST)
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போலீஸ் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் காவல் புரிவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலர் பொதுவெளிகளில் வழக்கம் போல கூட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர் ஒருவர் இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை கையில் உருட்டு கட்டையுடன் நிறுத்தி விசாரிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்வதற்கு பயமாக இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் ஊரடங்கை மீறி மக்கள் கூடுவதை தவிர்க்கவே அவர் அவ்வாறு செயல்படுவதாகவும், யாரையும் அவர் உருட்டுக்கட்டையால் தாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments