Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பக்கம் போகாதீங்க.. உருட்டு கட்டை போலீஸ் நிக்கிறார்! – மெரினாவில் பீதி!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (13:41 IST)
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போலீஸ் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் காவல் புரிவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலர் பொதுவெளிகளில் வழக்கம் போல கூட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர் ஒருவர் இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை கையில் உருட்டு கட்டையுடன் நிறுத்தி விசாரிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்வதற்கு பயமாக இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் ஊரடங்கை மீறி மக்கள் கூடுவதை தவிர்க்கவே அவர் அவ்வாறு செயல்படுவதாகவும், யாரையும் அவர் உருட்டுக்கட்டையால் தாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments