Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (18:29 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணைக்காக தனிப்படை போலீசார் துபாய் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் என்பவர் துபாயில் தலைமறைவாகியுள்ளார்.

இதனை அடுத்து, அவர் துபாயில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் துபாய் சென்று அவரை பிடிக்கத் தயாராக தனிப்படை போலீசார் துபாய் செல்ல உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தனிப்படையினர் துபாய் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது சுமார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 200 சாட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ரவுடி சாம்போ செந்தில்  பிடிக்கப்பட்டால், இந்த வழக்கில் மேலும் சில திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், தனிப்படை போலீசார் துபாய் செல்ல உள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments