Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக போராட்டம்: போலீசார் தடியடி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:32 IST)
குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவதூறு பேச்சை கண்டித்து சிதம்பரத்தில் போராட்டம் செய்யப் போவதாக நடிகை குஷ்பு அறிவித்ததோடு இன்று காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் கிளம்பினார். அப்போது அவர் முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தற்போது கேளம்பாக்கம் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
மேலும் விடுதியின் தடுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினரும் விடுதி அருகே கூடினர்
 
பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு போராட்டம் நடைபெற்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments