Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க சென்ற காவலர் மேல் புகாரா ? – விரக்தியில் வெளியிட்ட வீடியோ !

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:40 IST)
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்த்துக் காவலராக பணியாற்றி வரும் கார்த்தி தான் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார்.

சென்னை, கோயம்பேடு சரகத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர் கார்த்திக். கடந்த சில வாரங்களாக இவரது மனைவியின் செல்போனுக்கு தவறான தொடர் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. பேசுபவர்கள் அநாகரீகமாகப் பேசியுள்ளனர். இது சமமந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி தனது மனைவியை சந்தேகப்படுவதாகக் கூறி அவர் மேல் வழக்குப் பதிவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த கார்த்திக் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காவலர் ஒருவர் கொடுத்த புகாருக்கே சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனும்போது பொதுமக்களுக்கு என்ன நிலைமை என சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments