Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் எங்கே? கொலை வழக்கின் க்ளூ அவரா?

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (16:11 IST)
உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் தலைமறைவாகியுள்ளது போலீஸாருக்கு சந்தேகத்தை தூண்டியுள்ளது. 
 
முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.   
 
இந்நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உமா மகேஷ்வரியின் வீட்டில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். 
அந்த வகையில் சீனியம்மாள் என்னும் திமுக பிரமுகருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதுவும் இல்லை என ஆகிவிட்டது. எனவே, போலீஸார் மறுபடியும் துப்பு தேடி வருகின்றனர். 
 
அதே நேரத்தில் கொல்லப்பட்ட பணிப்பெண் மாரி, உமா மகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் அல்ல என்றும் அவரது மகள் கிருத்திகா வீட்டிற்கு வேலைகளை கவனித்து வந்தவர் என்றும் கூறப்படுகின்றது. 
 
உமா மகேஸ்வரியின் வீட்டு வேலைக்காரி சம்பவ தினத்தில் இருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகின்றது. அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடித்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments