Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (09:29 IST)
உசிலம்பட்டி அருகே ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் - கடத்தல் தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பன்னியான் விலக்கு பகுதியில் செக்காணூரணி காவல் நிலைய போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாகன சோதனையின் போது சந்தேகப்படும்படி வந்த இனோவா காரை இடைமறித்து சோதனை நடத்தியதில் காரில் 44 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.இந்த கடத்தல் தொடர்பாக வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் உள்பட பழனியைச் சேர்ந்த காசிமாயன், குழித்தலையைச் சேர்ந்த சுரேஷ், திண்டுக்கலைச் சேர்ந்த சுகுமாறன் என்ற 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 980 ரூபாய் ரொக்கம், 11 செல்போன்கள், கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments