Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ட வாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி.. போலீஸ் விசாரணை தீவிரம்

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (11:43 IST)
சேலம் அருகே தண்ட வாளாத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில், சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் தின்னப்பட்டி-கருப்பூர் பகுதிக்கு இடையே வந்தபோது, தண்ட வாளத்தில் ஒரு பாறாங்கல் இருப்பதை பார்த்துள்ளார் ரயில் ஓட்டுனர். இதையடுத்து உடனே ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் பாறாங்கல் மீது ரயில் மோதி, பாறாங்கல் தூள் தூளாக சிதறியது.

இதன் பிறகு ரயில் ஓட்டுநர், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்திலிருந்த ரயில் தண்ட வாளத்தை ஆய்வு செய்தனர். ரயில் மோதி சிதறிய பாறாங்கல்லையும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அந்த பகுதியில் பகலில் சுற்றித் திரிந்தவர்கள் யார்? என்பது குறித்தும், பாறாங்கல்லை வைத்தது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்பகுதியின் வழியாக செல்லும் தண்ட வாளம் என்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. ஆதலால் இந்த திட்டத்திற்கு பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் தண்ட வாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த செய்தி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments