Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலையை அகற்றிய காவல்துறை: சிவகங்கை அருகே பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (13:00 IST)
periyar
சிவகங்கையில் பாஜக பிரமுகர் எச் ராஜா வீட்டின் அருகே வைக்கப்பட்ட பெரியார் சிலையை திடீரென காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகங்கையில் உள்ள எச் ராஜா வீட்டின் அருகே திராவிடர் விடுதலை விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் கட்டிய புதிய வீட்டின் சுற்றுச்சுவரில் தந்தை பெரியாரின் சிலை வைக்கப்பட்டிருந்தது.
 
இந்த சிலைக்கு எச் ராஜா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எச். ராஜாவின் வீட்டு அருகே திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் வைத்த தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அகற்றியதாகவும் இதனால் அந்த பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் பெரியார் சிலை அகற்றப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments