Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

Siva
புதன், 4 டிசம்பர் 2024 (17:41 IST)
திருப்பத்தூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்த போது, போலீஸ் அதிகாரி ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் காந்தி சிலை அருகே ஒரு ஸ்பா செயல்பட்டு வந்தது. இதில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்துவதற்காக அந்த ஸ்பாவுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

இந்த நேரத்தில், பாலியல் தொழிலாளிகள் மற்றும் அந்த ஸ்பாவில் வேலை செய்பவர்கள் தப்பிச் சென்றனர். ஜெகன் என்ற போலீஸ் அதிகாரி, மொட்டை மாடியில் யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்பதை பார்க்கச் சென்றார். அப்போது அவர் இடறி கீழே விழுந்ததால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக, ரெய்டை நிறுத்திவிட்டு போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், 10 தையல் போட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த ஸ்பாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்பாவை பூட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தற்போது, அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்