Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணின் இரு சக்கர வாகனத்தில் லத்தியை விட்டு கீழே தள்ளிய காவலர்

பெண்ணின் இரு சக்கர வாகனத்தில் லத்தியை விட்டு கீழே தள்ளிய காவலர்
, செவ்வாய், 7 ஜூன் 2016 (11:39 IST)
மதுரை வில்லாபுரம் அருகே இரு சக்கரத்தில் வந்த பெண்ணின் வாகனத்தின் சக்கரத்தில் போக்குவரத்து காவலர் லத்தியை விட்டதால் நிலைத்டுமாறி குழந்தை உட்பட மூன்று பேர் கீழே விழுந்தனர்.


 
 
அவனியாபுரம் அருகே சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அந்த வழியாக வந்த ஸ்மிதா என்ற பெண்ணின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். ஸ்மிதா வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்கு முன்னதாக அந்த காவலர் வாகனத்தின் சக்கரத்தில் லத்தியை விட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் நிலை தடுமாறிய பெண்ணின் வாகனத்தில் இருந்து குழந்தை உட்பட மூன்று பேர் கீழே விழுந்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
போக்குவரத்து காவலரின் இந்த திமிர் நடவடிக்கையை கண்டித்து அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உயர் அதிகாரிகள் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி முருகன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கூலிப்படை - பாஜக தலைவர் அதிர்ச்சி தகவல்