Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கா பண்றீங்க? – மாணவர்களை நடுரோட்டில் நிற்க வைத்த போலீஸ்!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (12:50 IST)
தூத்துக்குடியில் காவல் வாகனத்தின் மீது அத்துமீறி ஏறி டிக்டாக் செய்த மாணவர்களுக்கு நூதனமான தண்டனையை போலீஸார் வழங்கியுள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் இளைஞர்கள் பலர் சமூல வலைதளங்களிலேயே பெரும்பாலும் நேரத்தை செலவழித்து வருகின்றனர். தங்களது நடிப்பு மற்றும் நடன திறமையியை காட்ட டிக்டாக் செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த டிக்டாக் மோகம் இளைஞர்களை மட்டுமல்லாது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதித்துள்ளது.

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது அனுமதியில்லாமல் ஏறிய கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வசனங்கள் பேசி டிக்டாக் செய்துள்ளனர். அவர்களை பிடித்து போலீஸார் விசாரித்த போது டிக்டாக்கில் அதிகம் லைக்ஸ் பெறுவதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளனர். அவர்களை தூத்துக்குடி மார்க்கெட் ரோட்டில் நிறுத்திய காவலர்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை தண்டனையாக வழங்கியுள்ளனர். காவல் துறையினரின் பணி எவ்வளவு கடினமானது என்பதை உணர செய்யவே இந்த நூதன தண்டனை வழங்கப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments