Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை மீட்புப்பணி: களத்தில் இறங்கிய காவல்துறையினர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (10:59 IST)
சென்னையில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு காண தமிழக அரசு அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி மீட்புப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



 


சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். காவல்துறையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போக்குவரத்தை ஒழுங்கு செய்துவிட்டு இன்று அதிகாலை தான் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பி தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இயல்பு நிலை திரும்பும் வரை காவல்துறை அதிகாரிகள் அனைத்து பணிகளிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன்னர் பேட்டியளித்தார்.

காவல்துறையினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments