Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்.க்கு பெருகும் ஆதரவு: மீண்டும் மாணவர் போராட்டம்?

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (14:07 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக பரவும் தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


 


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments