Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸாரை மிரட்டி, கடித்து விட்டு தப்பித்து ஓடிய கள்ளச்சாராய வியாபாரி...

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (15:57 IST)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள புதுவிடுதியில் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றாவாளிகள் திருவோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட போலிஸார் அவர்களை கைது செய்ய விரைந்து சென்றனர்.
அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும், போலீஸாருக்கும்  வாக்குவாதம் முற்றியது. பின்னர், குற்றவாளிகள் இருவரும் போலிஸாரை கடித்து விட்டு  அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இதில், தலைமைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆல்வின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
 
தற்போது தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.  
 
கள்ளச்சாராய வியாபாரிகள் போலிஸாரை கடித்து விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments