Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி சுற்றும் மக்கள் : தமிழகத்தில் 4100 பேர் மீது வழக்குப்பதிவு

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (13:03 IST)
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் பொருட்கள் வாங்குவதாக கூறி சாலைகளில் தொடர்ந்து நடமாடி வருவது போலீஸாருக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து போலீஸார் கெஞ்சி கேட்டும், அடித்து விரட்டியும் கூட மக்கள் வீடுகளில் அடங்க மறுப்பதாய் கூறப்படுகிறது. இதனால் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ள போலீஸார் ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 4,100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தண்ட தொகை அல்லது குறைந்த பட்ச சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் இருக்க தொடர்ந்து போலீஸார் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments