Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டம் கூட்டிய முன்னாள் அமைச்சர் பொன்முடி; வழக்கு போட்ட போலீஸார்!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (11:32 IST)
விழுப்புரத்தில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 317 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளிகள் கடைபிடிக்கப்படாமலும் கூட்டம் நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments