Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது ஒருதலை காதல்! – மறுத்ததால் நேர்ந்த விபரீதம்!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (09:27 IST)
புதுச்சேரியில் பள்ளி மாணவியை காதலித்து வந்த நபர், மாணவி காதலை ஏற்க மறுத்ததால் கொதிக்கும் எண்ணெய்யை மாணவி மேல் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டம் நரம்பை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். 20 வயதான மாதேஷ் லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு தற்போது அந்த பகுதியிலேயே சிற்சிறு வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். மாதேஷ் நீண்ட நாட்களாக பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாத மாணவி, தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். சிறுமி வீட்டின் ஜன்னல் பக்கமாக சென்ற மாதேஷ் அங்கேயே ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய்யை கொதிக்க காய்ச்சி ஜன்னல் வழியாக சிறுமி மீது ஊற்றியுள்ளார். இதனால் உடலில் காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலிக்க மறுத்த சிறுமி மீது கொடூரமான தாக்குதல் நடத்திய மாதேஷ் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments