Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா? - ‘ஹலோ போலீசை’ அழையுங்கள்

Webdunia
சனி, 28 நவம்பர் 2015 (17:33 IST)
காவல்துறையினர் உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘ஹலோ போலீசை’ அழைத்து உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.
 

 
விருதுநகர் மாவட்டத்தில் இந்த “ஹலோ போலீஸ்“ குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளதோடு புதிய அலை பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், ”நகர் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க “ஹலோ போலீஸ்” என்ற புதியஅலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
 
குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் பொது மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமாகும். 91500 11000 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
 
காவல் நிலையங்களில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க மறுத்தால் மேற்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புகார்தாரருக்கும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும். ரவுடியிசத்தை முற்றிலும் ஒழிக்க இந்த எண் பிரதானமாக பயன்படுத்தப்படும். இதற்கென ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments