Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையான பெண்ணின் பிணத்திற்கு பதில் நாய்க்குட்டியின் பிணம்: ஒரு உண்மை 'பாபநாசம்' சம்பவம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (22:54 IST)
கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் போலீசார் தோண்டிய போது அதில் ஒரு மாட்டின் உடலில் இருக்கும். அதை பார்த்து போலீசார் அதிர்ந்து போவார்கள். அதேபோல் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை தேடுவதற்காக போலீசார் தோன்றிய இடத்தில் நாய்க்குட்டியின் பிணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த முத்தரசி என்பவர் பரத் என்பவரை காதலித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய எண்ணி இருந்த நிலையில் திடீரென முத்தரசியை காணவில்லை. முத்தரசியை பரத்தும் அவரது தாயாரும் கொலை செய்துவிட்டதாக சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது பரத் தன் தாயாருடன் முத்தரசியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட முத்தரசியை அவர்கள் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. உடனே போலீசார் பிணம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டியபோது அங்கு முத்தரசியின் பிணத்திற்கு பதிலாக ஒரு நாயின் உடல் இருந்தது. முத்தரசியின் பிணத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்து விட்டு நாயின் பிணத்தை பரத்தின் தந்தை புதைத்து வைத்துள்ளதாக போலீசார் சந்தேகம் அடைகின்ன்றனர்.
 
இதனை அடுத்து பரத்தின் தந்தையை கைது செய்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். பாபநாசம் படத்தில் வரும் காட்சியைப் போலவே ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments